இத்தனை ஆண்டுகள் கடவுள் யார் என்று நான் யோசித்து எடுத்த முடிவு, (தவறாகவும் இருக்கலாம்...).
கடவுளின் அடிப்படை பண்புகள்:
1. ஆக்கமும் அழிவும் இல்லாமல் இருத்தல்.
2. எங்கும் இருத்தல்.
மேற்கூறிய இரு பண்புகளும் கொண்ட இரண்டு விஷயங்கள் இருக்கிறது.
1. அண்டம் (பிரபஞ்சம்).
2. ஆற்றல்.
அண்டம் - உலகத்தின் எல்லா பொருட்களும் இதனுள் அடங்கும், எங்கும் இருக்கிறது.
இதுவரை யாரும் அதன் ஆதியையும் அந்தத்தையும் அறியவுமில்லை.
என்னை பொறுத்த அளவில் அதற்கு ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை.
விஞ்ஞானிகள் அண்டத்தின் ஆக்கமாக கூறும் "பெரு வெடி" கொள்கை, மொத்த அண்டத்திற்கு பொருந்தாது என நினைக்கிறன், "பெரு வெடி" கொள்கை படி உருவானது அண்டத்தின் ஒரு பகுதிதான்.
ஆற்றல் - ஆக்கமும் அழிவும் இல்லை, ஆனால் எல்லா இடத்திலும் இருக்கிறதா என்பது ஆராயத்தக்கது.
வேதாத்ரியம் கூறுவது - இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் சூழ்ந்து அழுத்துவது ஆகும்.வெற்றிடம்அல்லா எல்லா பொருட்களையும் அது சூழ்ந்து எல்லா திசைகளில் இருந்தும் அழுத்துகிறது.
வெற்றிடத்தின் ஊடே அது பரவுகிறது. அப்படியென்றால் ஆற்றல் இல்லாத இடம் பருப்பொருள் என்று நினைத்தால் அதுவும் தவறு.
ஏன்?
ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற சமன்பாடான E = MC2 , என்ன சொல்கிறது என்று பார்ப்போமேயானால் , ஆற்றலும், நிறையும் ( பொருளும் ), வேறல்ல இரண்டும் ஒன்றுதான். நிறை ஆற்றலின் இன்னொரு வடிவம், ஆற்றல் நிறையின் இன்னொரு வடிவம். நீரும், பனிக்கட்டியையும் போன்று.
நீர் என்பது ஆற்றல் என்றால் பனிக்கட்டி என்பது நிறை.
இந்த பிரபஞ்சமே ஆற்றல் தான். அந்த ஆற்றல் தான் கடவுள். எல்லா உயிருள்ள உயிரற்ற பொருட்களும் நிறை வடிவத்தில் இருக்கும் ஆற்றல். ஆக எல்லாமே கடவுள்.
சரி அப்படியென்றால் இந்த சிவன், ஏசு , அல்லா , புத்தர் , இவர்களெல்லாம் யார். ஏன் இவர்கள் கடவுள் என்று அறிய பட்டார்கள்.
கடவுளின் அடிப்படை பண்புகள்:
1. ஆக்கமும் அழிவும் இல்லாமல் இருத்தல்.
2. எங்கும் இருத்தல்.
மேற்கூறிய இரு பண்புகளும் கொண்ட இரண்டு விஷயங்கள் இருக்கிறது.
1. அண்டம் (பிரபஞ்சம்).
2. ஆற்றல்.
அண்டம் - உலகத்தின் எல்லா பொருட்களும் இதனுள் அடங்கும், எங்கும் இருக்கிறது.
இதுவரை யாரும் அதன் ஆதியையும் அந்தத்தையும் அறியவுமில்லை.
என்னை பொறுத்த அளவில் அதற்கு ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை.
விஞ்ஞானிகள் அண்டத்தின் ஆக்கமாக கூறும் "பெரு வெடி" கொள்கை, மொத்த அண்டத்திற்கு பொருந்தாது என நினைக்கிறன், "பெரு வெடி" கொள்கை படி உருவானது அண்டத்தின் ஒரு பகுதிதான்.
ஆற்றல் - ஆக்கமும் அழிவும் இல்லை, ஆனால் எல்லா இடத்திலும் இருக்கிறதா என்பது ஆராயத்தக்கது.
வேதாத்ரியம் கூறுவது - இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் சூழ்ந்து அழுத்துவது ஆகும்.வெற்றிடம்அல்லா எல்லா பொருட்களையும் அது சூழ்ந்து எல்லா திசைகளில் இருந்தும் அழுத்துகிறது.
வெற்றிடத்தின் ஊடே அது பரவுகிறது. அப்படியென்றால் ஆற்றல் இல்லாத இடம் பருப்பொருள் என்று நினைத்தால் அதுவும் தவறு.
ஏன்?
ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற சமன்பாடான E = MC2 , என்ன சொல்கிறது என்று பார்ப்போமேயானால் , ஆற்றலும், நிறையும் ( பொருளும் ), வேறல்ல இரண்டும் ஒன்றுதான். நிறை ஆற்றலின் இன்னொரு வடிவம், ஆற்றல் நிறையின் இன்னொரு வடிவம். நீரும், பனிக்கட்டியையும் போன்று.
நீர் என்பது ஆற்றல் என்றால் பனிக்கட்டி என்பது நிறை.
இந்த பிரபஞ்சமே ஆற்றல் தான். அந்த ஆற்றல் தான் கடவுள். எல்லா உயிருள்ள உயிரற்ற பொருட்களும் நிறை வடிவத்தில் இருக்கும் ஆற்றல். ஆக எல்லாமே கடவுள்.
சரி அப்படியென்றால் இந்த சிவன், ஏசு , அல்லா , புத்தர் , இவர்களெல்லாம் யார். ஏன் இவர்கள் கடவுள் என்று அறிய பட்டார்கள்.
No comments:
Post a Comment